search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார இணைப்பு துண்டிப்பு"

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்குள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    மோதல் கலவரமாக மாறிய சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 10 பேர் பலியாகினர். நேற்று, அண்ணாநகர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளைஞர் பலியாகினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இன்று காலை 5.30 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    ×